BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FeTNA - ECPv6.15.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://fetna.org
X-WR-CALDESC:Events for FeTNA
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/New_York
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20260308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20261101T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20270314T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20271107T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260124
DTEND;VALUE=DATE:20260125
DTSTAMP:20260403T200240
CREATED:20260209T195912Z
LAST-MODIFIED:20260209T195042Z
UID:5734-1769212800-1769299199@fetna.org
SUMMARY:புனைவெழுத்தின் சாத்தியங்கள்- எழுத்தாளர் பா.வெங்கடேசன்
DESCRIPTION:வணக்கம்! \nபுனைவெழுத்தின் சாத்தியங்கள் \nமொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே புனைவு வாய்மொழியாக கதை சொல்வது என்ற செயலும் உருவாகி பின்னர் அவை எழுத்திலக்கியங்களாக வலுப்பெற்றிருக்க வேண்டும். மனிதக் கற்பனையை\, மொழியைத் தாண்டி புனைவின் வழியே நீட்டிக்கத்தான் கவிதைகள்\, கதைகள் எல்லாம் செய்யப்படுகின்றன. புனைவின் வழியே ஒரு சமூகம் இன்னும் கண்டடையாததை இன்னொரு சமூகம் வழியாகக் கண்டடைவதை காலங்காலமாய் கதைகள்\, புனைவுகள் செய்து வருகின்றன. புராணங்கள்\, வாய்வழிக் கதைகளின் தேவையும் இதுதான்\, மொழியைத் தாண்டி புனைதல். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்கு கற்பனையும்\, கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. மனித வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பது கற்பனைகளும்\, கதைகளும் தான். \nஎழுத்து மரபில் பேசப்பட்ட கதைகளைவிட வாய்மொழி மரபில் பரவிய கதைகளே இன்றும் பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும்\, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான கதைகள் உருவாகியிருக்கின்றன. பல கதைகள் தேச எல்லைகள் கடந்து உலகப் பொதுக் கதைகளாகவும் பேசப்படுகின்றன. தமிழ் மரபு\, காவியங்களை\, வாய்மொழிக்கதைகளை அடிப்படையாகக்கொண்டது. அயல் இலக்கியங்கள் புனைவுகளில் வெவ்வேறு பரிசோதனைகளை செய்யக் கூடியன. கதையின் போக்கு\, கரு\, உத்தி\, மொழி\, கதைசொல்லல் என ஒவ்வொன்றிலும் புது முயற்சிகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். கடந்த நூற்றாண்டில் தமிழிலும் புனைவில் மொழி\, வடிவம்\, கதை சொல்லல் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புனைவெழுத்தின் சாத்தியங்கள் என்ன என்பதை அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை மற்றும் புனைவின் எழுச்சியில் தீர்மானமாகிறது. \nஅந்த வகையில் புனைவெழுத்தில் அதன் வடிவத்தில்\, மொழியில் பல உத்திகளைகளைக் கையாண்டவர் எழுத்தாளர் பா.வெங்கடேசன். சமகால அரசியலையும்\, வரலாற்றையும் இணைத்து ஊடுபிரதித்தன்மையுடன் அவர் எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை. பா.வெங்கடேசனின் ராஜன் மகள் என்னும் நீள்கதை அவருக்கு தமிழ் புனைவிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை அளித்தது. கதைப்பின்னலாகவும்\, மொழிப்பின்னலாகவும் எழுதப்பட்ட அவரது தாண்டவராயன் கதை மற்றும் பாகீரதியின் மதியம் என்ற இரு நாவல்களும் சிறந்த நாவல்களின் வரிசையில் வருவன என விமர்சகர்கள் கருதுகிறார்கள். வாரணாசி அவருடைய மூன்றாவது நாவல். வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991-இல் எழுதிய (Ghost in the Machine ) கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்கும் குறுநாவலை பொய்யுரு என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். புனைவிலக்கியத்தில் இவருடைய சீரிய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’\, ‘தமிழ்திரு’\, ‘விளக்கு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. \nஇந்தமாதம் நடைபெற இருக்கும் இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் பா.வெங்கடேசன்\, புனைவெழுத்தின் சாத்தியங்களை வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்க வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். \nபுனைவெழுத்தின் சாத்தியங்கள் பற்றி அறிந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள். \nநாள்: சனவரி 24\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய நேரம்: இரவு 9.30 மணி \nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive \nநன்றி.
URL:https://fetna.org/event/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99/
LOCATION:USA\, United States
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260214
DTEND;VALUE=DATE:20260215
DTSTAMP:20260403T200240
CREATED:20260209T201359Z
LAST-MODIFIED:20260209T203654Z
UID:5739-1771027200-1771113599@fetna.org
SUMMARY:சிறுகோட்டுப் பெரும்பழம்:சங்க இலக்கியத்தில் காதல் - கவிஞர் சக்தி ஜோதி
DESCRIPTION:உயிர் சிறிது; காதலோ பெரிது!! (குறுந்தொகை:18) \nவேரல் வேலி வேர்க்கோட் பலவின்\nசாரல் நாட! செவ்வியை ஆகுமதி!\nயார்அஃது அறிந்திசி னோரே\, சாரல்\nசிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்\nஉயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!\n-கபிலர். \nகாதல் என்பது வெறும் உணர்வோ செயலோ அல்ல\, அது ஒரு நாகரிகத்தின் அடையாளம். எந்த சமூகம் காதலை கொண்டாடுகிறதோ\, அந்த சமூகமே உயர்ந்த நாகரிகம் கொண்டதாக இருக்கும். மனித குலத்தின் ஆதி நிலங்களுள் ஒன்றென சொல்லப்படும் தமிழ் நிலமானது\, உயிர்களின் அடிப்படை உணர்வான அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட சமூகமாகவே தோன்றி நிலைப்பெற்றுள்ளது. சங்ககால தமிழ் சமூகம் பொருள்முதல்வாத சமூகமாக இருந்தது. அதனால்தான் அவர்களால் காதலை உயர்வாக போற்ற முடிந்தது. களவும்\, கற்பும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளாக இருந்தன. தமிழர்கள் காதலை வெறும் உணர்வாக மட்டும் பார்க்கவில்லை. அதை மிக நுட்பமாக வகைப்படுத்தி\, ஐந்திணைகளாக பிரித்தனர். சங்க இலக்கியங்களின் அகப்பாடல்கள் அன்பின் முதிர்ச்சிகளாகிய காதற் பாடல்களாகும். உலகக் காதலர் அனைவருக்கும் உரியவையாகும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட 2381 சங்கப் பாடல்களில்\, 1862 பாடல்கள் அகத்திணைப் பாடல்களாக உள்ளன. இது மொத்த பாடல்களில் 78% என்ற அளவிற்கு காதல் பாடல்கள் இருப்பதைக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரமே சங்ககால தமிழர்கள் காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சங்ககால தமிழ்ச் சமூகம் காதலை ஒரு பண்பாட்டு அடையாளமாகக் கொண்டாடியது. குறுந்தொகையில் வரும் இந்த பாடல் அதை உணர்த்துகிறது: \n“யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” \nகாதலைக் கொண்டாடும் இம்மாதத்தில் “சிறுகோட்டுப் பெரும்பழம் – சங்க இலக்கியத்தில் காதல்” என்ற தலைப்பில் கவிஞர் சக்தி ஜோதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். \nசங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதி 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி\, 2025 ஆம் ஆண்டில் “திருக்காட்சி” என்ற கவிதை நூல் வரை இதுவரை பதினைந்து கவிதைத் தொகுப்புகளையும்\, 2026 ஆம் ஆண்டில் “சங்க இலக்கியம்-உடல் மனம் மொழி என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள்\, நவீன இலக்கியம்\, நீர் மேலாண்மை\, கல்வி\, சுற்றுச்சூழல்\, விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும். சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம்\, சமூக ஊடகம் வரையிலான பார்வையுடன் இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். \nசங்க இலக்கிய காதல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள். \nநாள்: பிப்ரவரி 14\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய நேரம்: இரவு 9.30 மணி\nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive \nநன்றி.
URL:https://fetna.org/event/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
END:VCALENDAR